எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சாதிதி வாரி அந்தந்த மாநிலங்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் தயங்குவது ஏன்? சீர்காழியில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பு.தா.அருள்மொழி கேள்வி?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர்கள் பெருவிழா தொடர்பாக வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சித்தமல்லி. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் கோ.சு.மணி வரவேற்புரை ஆற்றினார்.வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம் .சக்திவேல் முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளர்களாக வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரி சண்முகம், கடலூர் பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன், வன்னியர் சங்க மாநில செயலாளர் அய்யாசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செம்மங்குடி முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூத்தா அருள்மொழி கூறியதாவது

1931 வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது அதன் பிறகு தடைபட்டுள்ளது. தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு மத்திய அரசுதான் நடத்த வேண்டும் எனக் கூறி அதனை தாமதப்படுத்தி வருகிறது.

அந்தந்த மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதனை ஏற்று நான்கு மாநிலங்களில் சாதி வாரியை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.ஆனால் ஏனோ? தமிழக அரசு மட்டும் அதனை செய்ய தயங்குகிறது. வரும் மே மாதம் மாமல்லபுரம் அருகே சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.

நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல எங்களிடம் ஏதும் ஆயுதம் இல்லை எங்களது பலம் எல்லாம் மக்கள் மட்டும்தான். சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் 50 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த மாநாடு நடைபெற உள்ளது.

Share this to your Friends