எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக கழக செய்தி தொடர்புக்கு இணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மாதானம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவில் கழக செய்தி தொடர்புக்குழு இணை செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார் .இந்நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் தினேஷ்குமார் மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் பி எம் ஸ்ரீதர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி என் ரவி ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார், ரவிக்குமார், பிரபாகரன், நகர செயலாளர் சுப்புராயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைத்து மகளிர்க்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *