தென்காசி மாவட்டம் வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா முன்னாள் பழைய மாணவர்களின் சீர்வரிசையுடன் கோலாகலமான கொண்டாட்டப்பட்டது

வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்து நடைப்பெற்ற ஆண்டு விழாவில் தென்காசி முதன்மை கல்வி அலுவலர் எல். ரெஜினி தலைமை தாங்கினார் தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் ராஜன் முன்னிலை வகித்தார்

முன்னாள் மாணவ மாணவியர்களை ஒன்றிணைத்து விழா ஏற்பாட்டினை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

தென்காசி வட்டார கல்வி அலுவலர் சு. இளமுருகன் வரவேற்புரை வழங்கினார் முன்னாள் மாணவர்கள் மேளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு
வந்து 100 மரக்கன்றுகள் மற்றும் குத்துவிளக்கு பழங்களுடன் சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளி கொண்டு வந்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கினார்கள்.

இந்த விழாவில் பள்ளிக்கு இடம் வழங்கிய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், இந் நாள் ஆசிரியர் களுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் உஷாராணி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

அதனை யெடுத்து குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் செ.சத்யராஜ், தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முகசுந்தர பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நூற்றாண்டு திருவிழா கேடயம் முன்னாள் மாணவர்கள் மூலமாக சிறப்பு செய்தனர் பின்பு
அருகாமை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான அய்யாபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, அழகப்பபுரம், பண்பொழி பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நூற்றாண்டு ஆண்டு விழாவில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா போன்ற சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Share this to your Friends