ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., உத்தரவின்படி ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .சீராளன் வழிகாட்டுதலின்படி 17.02.2025 இன்று “36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூன்று சக்கர ஆட்டோ பேரணி நடைபெற்றது.

ஜெயங்கொண்ட நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்கள். பேரணியில் ஜெயங்கொண்டம் நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்றன. பேரணி ஜெயங்கொண்ட போக்குவரத்து காவல் நிலையம் முன்பு தொடங்கி அண்ணா சிலை வழியாக சென்று ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் முடிவடைந்தது.

தனியார் மண்டபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகர சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள்,கார் ஓட்டுநர்கள்,வேன் ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து ஆய்வாளர் .மதிவாணன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

கூட்டத்தில் விபத்து நேரத்தில் மக்களுக்கு உதவிய, தங்களது வாகனத்தில் தவறவிட்ட பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த ஓட்டுனர்களை பாராட்டி அவர்களுக்கு குட் சமரிட்டான் (நல்ல மனிதர்) காவல்துறை சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

மேலும் காவல் உதவி செயலி குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வின் போது ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் .நந்தகுமார் ,போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் .கொளஞ்சி மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தார்கள்.

Share this to your Friends