தூத்துக்குடி புத்தகத்திருவிழா வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சர் கீதாஜீவன் நினைவு பாிசு வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்டத்தின் 6வது புத்தகத்திருவிழா நிகழ்ச்சியில் “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சா்மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் எதிர்கால சந்ததியினர்களான இளைய சமுதாயத்தினர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், வரலாறு, பண்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6வது புத்தகத் திருவிழா தொடர்ந்து படி தூத்துக்குடி-யின் நிகழ்ச்சியில் “தொன்மைப் போற்று” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
விழாவில் கலெக்டர் இளம்பகவத், ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நாரயணவடிவு, இந்திரா, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், இணைச்செயலாளர் மகேஸ்வரன்சிங், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டச்செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், சுரேஷ்மகாராஜா, பொன்னுச்சாமி, கவுன்சிலா்கள் விஜயக்குமாா், ஜான், பகுதி அணி அமைப்பாளா் சுரேஷ்குமாா், பெருமாள் கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்
