மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்
அரசு வழங்­கும் பல்­வேறு சேவை­களை மக்­க­ளின் வீடு­தே­டிச் சென்­ற­டை­யச் செய்­யும் தமிழ்­நாடு அர­சின் உய­ரிய எண்­ணத்­தின் அடுத்த கட்­ட­மாக, மாநி­லத்­தில் உள்ள வயது முதிர்ந்­தோர் மற்­றும் மாற்­றுத் திற­னாளி குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டு, அவர்­க­ளின் இல்­லத்­திற்கே சென்று அரிசி, சர்க்­கரை உள்­ளிட்ட ரேசன் பொருட்­களை விநி­யோ­கம் செய்­யும் “முத­ல­மைச்­ச­ரின் தாயு­மா­ன­வர் திட்­டம்” முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது


மக்­கள் நலன்­சார்ந்த இத்­திட்­டம் சிறப்­புக் கவ­னம் தேவைப்­ப­டும் பிரி­வி­ன­ரின் வாழ்வை மேம்­ப­டுத்­து­வ­து­டன் உண­வுப் பாது­காப்­பை­யும் உறுதி செய்­யும். இத்­திட்­டத்­தின் வாயி­லாக 34,809 நியா­ய­வி­லைக் கடை­க­ளைச் சேர்ந்த 70 வய­திற்கு மேற்­பட்ட மூத்த குடி­மக்­க­ளைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்­டை­க­ளில் உள்ள 20,42,657 பய­னா­ளர்­க­ளும், 91,969 குடும்ப அட்­டை­க­ளில் உள்ள 1,27,797 மாற்­றுத்­தி­ற­னா­ளி­ க­ளும்,

ஆக மொத்­தம் 16,73,333 குடும்ப அட்­டை­க­ளில் உள்ள 21,70,454 பய­னா­ளர்­க­ளுக்கு அவர்­கள் இல்­லங்­க­ளி­லேயே குடி­மைப் பொருட்­களை விநி­யோ­கம் செய்ய வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு மாத­மும் இரண்­டா­வது சனி மற்­றும் ஞாயிற்­றுக்­ கி­ழ­மை­க­ளில் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இத்­திட்­டத்­தில் பயன்­பெற தகு­தி­யுள்ள குடும்ப அட்­டை­கள் மற்­றும் பய­னா­ளர்­க­ளின் விவ­ரம் உண­வுப் பொருள் வழங்­கல் மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை­யி­ட­மி­ருந்து பெறப்­பட்டு, கள அலு­வ­லர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

மின்­னணு எடைத்­த­ராசு, e-PoS இயந்­தி­ரம் உள்­ளிட்ட உப­க­ர­ணங்­க­ளு­டன் மூடிய வாக­னங்­க­ளில் குடி­மைப் பொருட்­க­ளைப் பாது­காப்­பா­கத் தகு­தி­யுள்ள பய­னா­ளர்­க­ளின் இல்­லத்­திற்கே சென்று நியா­ய­வி­லைக் கடை விற்­ப­னை­ யா­ளர்­கள் விநி­யோ­கிப்­பர்.
70 வய­துக்கு மேல் உள்ள குடும்ப அட்­டை­தா­ரர்­கள் மற்­றும் மாற்­றுத்­தி­ற­னாளி களின் வீட்­டிற்கே சென்று குடி­மைப் பொருட்­கள் வழங்­கு­வ­தால் அர­சுக்கு ரூ.30.16 கோடி செல­வா­கும் என மதிப்­பி­டப்­ பட்­டுள்ள மக்­கள் நலன் சார்ந்த இத்­திட்­டம், நலி­வுற்ற பிரி­வி­ன­ரின் வாழ்­வா­தா­ரத்தை சிறப்­பு­றச் செய்­வ­து­டன் அவர்­ தம் உண­வுப் பாது­காப்­பை­யும் உறு­தி­செய்­யும்.இதன்படி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்களை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.