ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொந்தம்புளி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. கமுதி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், பொந்தம்புளி, இடிவிலகி, அரியமங்கலம், எருமைகுளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காதர் முகைதீன்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சேதுராமன்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், ,ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் ,வட்ட வழங்கல் அலுவலர் விஜயா,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்தி,சத்தியேந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் பிரியதர்ஷினி, பரமேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் எழில்அரசன், ஊராட்சி செயலர் ஜெயச்சித்ரா மற்றும்
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 7 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, 2 பேருக்கு பயிர் வகை விதைத் தொகுப்பு, 2 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.
மேலும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 230 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது
