கம்பம் நகர் இந்து எழுச்சி முன்னணி நடத்தும் 3-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் கம்பம் – கோம்பை ரோடு, ரைஸ்மில் பரமத்தேவர் மண்டபத்தில் நடந்தது
இந் நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனத்தலைவர் பொன் ரவி தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் க.ராமராஜ் மாவட்ட பொதுச்செயலாளர் மாய லோகநாதன் மாவட்ட செயலாளர் இளங்கோ பிரதாப் அவர்கள் கம்பம் நகர தலைவர்
அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கம்பம் நகர பொதுச்செயலாளர் பரம பெருமாள் நன்றியுரை ஆற்றினார்
நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி தேனி, சின்னமனூர்,பெரியகுளம், ஆண்டிபட்டி ,மாவட்ட,ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கம்பம் நகரில் சென்று ஆண்டு வைத்த இடங்களில் மட்டும் விநாயகர் திருமேனிகளை வைத்து பிரதிஷ்டை செய்வது எனவும்
கம்பம் நகர விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்கள் விரதம் இருந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அரசின் சட்ட திட்டங்களுக்கும்,காவல்துறையின் வழிகாட்டுதலின் படி விழாவினை சிறப்பாக நடத்துவதெனமுடிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கம்பம் நகர இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
