அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
ஆண்டுதோறும் பிப்ரவரி - 9ந்தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 07.02.2025 இன்று டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளரகள் .சிவக்குமார் ,(தலைமையிடம்) மற்றும் .விஜயராகவன் (மதுவிலக்கு அமல் பிரிவு) முன்னிலையில் கொத்தடிமை தொழிலாளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, கொத்தடிமை தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றுவேன் என்றும்,
கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மேலும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களிலும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டது.