திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம் விடப்பட்டது.

துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4 ந் தேதி திருச்சி விற்பனைக் குழு செயலர் சொர்ணபாரதி தலைமையில் வேளாண்மை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தி.தங்கதுரை, உரிம இட ஆய்வாளர் அ.அன்புசெல்வி,மேற்பார்வையாளர் சி.மோகனா மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம் விடப்பட்டது.அதிகபட்சம் ஒரு குவிண்டால் ரூபாய் 7,819 க்கும், மாதிரி விலை ரூபாய் 7,053 க்கும், குறைந்தபட்ச விலை ரூபாய் 6,199 க்கும் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலத்தில் பெரம்பலூர், கொங்கனாபுரம், விழுப்புரம் ,மகுடன்சாவடி, செம்பனார் கோவில்,பெரகம்பி, கும்பகோணம், பண்ருட்டி, கரூர் உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends