திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.