ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் பேட்டி
கோவை சாய்பாபா காலனியில் என்.எஸ். ஆர். சாலையில் புதுப்பிக்கப்பட்ட
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதனை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.
தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ், 2000-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 25வது ஆண்டை கொண்டாட உள்ளது. 13 மாநிலங்களில் 234 கிளைகளுடன் வீட்டுக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 5 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.14,500 கோடி வர்த்தகத்தில் உள்ளது
. கோவையில் 24 கிளைகளில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை மண்டலத்தில் மட்டும் 15,300 வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன், குறைந்த வட்டி விகிதத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களை வழங்கி வருகிறது. சாய்பாபா காலனி கிளையில் மட்டும் ரூ.173 கோடி வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் உள்ளபட்சத்தில் 48 மணி நேரத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும். ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3 கோடி வரை கடன் கொடுக்கப்படுகிறது.
நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் சென்னையில் கொண்டாட உள்ளோம். சென்ற ஆண்டு 430 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளோம். நடப்பாண்டு ரூபாய் 500 கோடி லாபம் ஈட்டுவோம் என எதிர்பார்க்கிறோம். இந்தாண்டு 13 மாநிலங்களிலும் உள்ள 234 கிளைகளிலும் ரூ. 7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடி வீட்டுக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்றார்.
பேட்டியின் போது ரெப்கோ வங்கியின் இயக்குனர் இன்னாசி, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் கே. முரளிதரன், மண்டல திட்ட மேலாளர் கே.சி சிஜூ, மண்டல மேலாளர் கே. சிபி, சாய்பாபா காலனி கிளை மேலாளர் எஸ் வில்லியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.