வலங்கைமான் அருகே உள்ள மதகரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் முதல் நாளில் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் மதகரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து கல்வி உபகரணங்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறந்த முதல் நாளிலேயே பள்ளிக்கல்வித்துறையின் விலையில்லா சீருடை, புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்கப்பட்டன