திருவொற்றியூர் கிழக்கு பகுதி சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா. திருநங்கைக்கு உதவி தொகை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவி மற்றும் உணவு வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் திமுக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை, திருவெற்றியூர் கிழக்கு பகுதி சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

திருவெற்றியூர் மண்டல குழு தலைவர் திமு.தனியரசு.MC. ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் சுதர்சனம் கலந்து கொண்டார்.

அப்போது வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞர் திருவுருவ ப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்பு திராவிட கட்சி கொடியினை ஏற்றி வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேக் மற்றும் ஏழை திருநங்கைக்கு ஊக்கத்தொகை வழங்கியும் எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர். இதில் திமுக நிர்வாகிகள்,சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் RD.மதன்குமார், பகுதி அவை தலைவர் ஆர் சி. ஆசைத்தம்பி, மாவட்ட பிரதிநிதி ரஜினி நந்தி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சைலேஷ், எம்.வி.குமார் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *