உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச சீருடை இலவச புத்தகங்களை வழங்கி பேசும்போது மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும் மாணாக்கர்கள் பள்ளியில் பயின்று வரும் படிப்பே அவர்களின் நிரந்தர சொத்து இதற்காகத்தான் தமிழக முதல்வர் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்றாம்வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பள்ளி படிப்பில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகத்தா ன் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள் இலவச புத்தகங்கள் இலவச காலணிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன இதனை பயன்படுத்தி மாணவ மாணவிகள் பள்ளி படிப்பில் நல்ல முன்னேற்றமும் அடைய சிறந்தது ஒரு கல்வியை கற்று நல்லதொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *