கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடம்பாறை அணைப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த தின விழா முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்கிற ஆ.சுதாகர் முன்னிலையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இதேபோல வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி கேக் வெட்டி சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, மாவட்ட அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர், பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்