கோவை
கோவையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புறப் பாடலுக்கு ஏற்ப ஒரு சேர நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை செங்காளிபாளையம் பகுதியில் ஸ்ரீ ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவின் 15 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த இரண்டு மாதமாக பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கான நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பெண்கள் ஒரே மாதிரியான வண்ண உடைகள் அணிந்து நாட்டுப்புற பாடலுக்கு ஏற்ப பம்பை இசை முழங்க ஒரு சேர நடனம் ஆடினர்.இவர்களில் இந்த நடனம் கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னோர் காலத்தில் ஆண்கள் மட்டுமே வள்ளி கும்மியாட்டம் நடனமாடிய நிலையில் தற்போது பெண்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டு நடனமடி வருவதாகவும் இதனால் கலைகளை மீட்டெடுப்பதுடன் மன நிம்மதி கிடைப்பதாக வள்ளி கும்மியாட்ட கலைஞர்கள் தெரிவித்தனர்.