இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
மேட்டுப்பாளையம் மைலி அம்மன் ஆலய வைகாசி பெருவிழா
திருவாரூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மைலி அம்மன் ஆலய வைகாசி திருவிழாவில் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குட உற்சவம் நடைபெற்று சப்த கன்னிகளுக்கு மஞ்சள், பால், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு மகா தீபாரணை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அறுசுவையுடன் அன்னதானம் நடைபெற்றது. வைகாசி பெருந்திருவிழாவில் இன்று இரவு அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.