திருவெற்றியூர்.
நேற்று கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி இன்று அனைத்து பள்ளிகளும் திறந்த நிலையில். தமிழக முதல்வர் அரசு பள்ளி மாணவர்களை பள்ளி முதல் நாளில் வரவேற்று இனிப்புகள் வழங்கி வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் மணலி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் பள்ளி மாணவ மாணவிகளை வரவேற்று அவர்களுக்கு சீருடை நோட்டுப் புத்தகங்கள் இனிப்புகளை வழங்கினார் இவருடன் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதேபோன்று திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளியில் சென்னை மாநகர ஒன்னாவது மண்டல குழு தலைவர் தி மு தனியரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை நோட்டுப் புத்தகங்கள் பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளை வரவேற்றார் இவருடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் திமுக அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன். எம் வீ குமார். ஆசைத்தம்பி. குமரேசன். தமிழ்ச்செல்வன். சைனஸ். கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.