ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் உள்ள வளாகத்தில் வட்டார புள்ளியியல்த்துறை அலுவலகம் உள்ளது அதன்பின்பு இருந்த கழிவறை தொட்டியில் மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு எதிர்பாராத விதமாக கழிவறை தொட்டியில் உள்ள விழுந்து விட்டது

இதை நேரில் பார்த்த வேளாண்மைத்துறை அலுவலர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார்கள் தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் உடனடியாக சாயல்குடியிலிருந்து தீயணைப்பு துறை வாகனம் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தது பிறகு , சக அலுவலக நண்பர்கள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் பசுமாட்டை கழிவறை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது பிறகு சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு பசுமாடு நல்ல நிலையில் நடந்த சென்றது ஆனால் கடைசிவரை மாட்டின் உரிமையாளர் வரவில்லை

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *