திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் 57 குன்னியூர் முள்ளியாறு வடக்கு திசையிலும் அரிச்சந்திர நதி தெற்கு திசையிலும் அமைந்துள்ள இந்த கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக உருவாகி பெரிய கோவிலாக இருக்கும் அருள்மிகு காமாட்சி அம்மனின் வைகாசி திருவிழா தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது,
காஞ்சி மகா பெரியவாள் சங்கராச்சாரியார் இந்த கோவிலுக்கு வந்து விஜயம் செய்திருக்கிறார் என்பது சிறப்பு, அதனை தொடர்ந்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மனித உருவம் பொறித்த பொம்மை, விபத்தில் கை பாதிப்பு ஏற்பட்டவர்கள்,கால் பாதிப்பு ஏற்பட்டவர்கள், கை கால் உருவங்கள் பொரித்த பொம்மைகளை வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மதலை எடுக்கும் நிகழ்ச்சியும் மிக சிறப்பாக கிராமவாசிகள், விழா குழுவினர் அனைவரும் ஏற்பாடு செய்திருந்தார்கள்,
இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீக்குண்டம் இறங்கி தன்னுடைய நேர்த்தி கடனை செலுத்தினார்கள், விரிவான பாதுகாப்பை காவல்துறையினர் செய்திருந்தார்கள்,