மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்க
பள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்புத் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஷர்மிளா பானு கலந்து கொண்டனர். குழந்தைகள் நாதஸ்வரம், மிருதங்கம், மங்கல இசையோடு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
பள்ளி முதல் நாள் வருகை தந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, மலர் தூவி சிறப்பு வரவேற்பளிக்கப் பட்டது.நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மோசஸ், முராத்பானு, பள்ளி மேலாண்மைக் குழு முன்னாள் தலைவர்
ராமலெட்சுமி சிறப்பாகச் செய்திருந்தனர்.
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக பறை இசை முழங்கி இனிப்புகள் வழங்கி வரவேற்கும் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். மாணவர்களை மகிழ்ச்சியாக வரவேற்கும் விதமாக மேள தாளங்கள் முழங்க டெடி பியர் பொம்மை மற்றும் கோமாளி வேடமணிந்த கலைஞர்கள் நடனமாடி மற்றும் நற்பண்புகளை மற்றும் கல்வியின் அவசியத்தை விளக்கும் நாடகம் நடத்தி மகிழ்ச்சியாக கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். மாணவ, மாணவிகள் டெடி பியர் மற்றும் கோமாளி ஆகியோருடன் உரையாடி மகிழ்ந்தனர்.
பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவ மாணவியர்
களுக்கும் காலை உணவு பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. மேலும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன. மாணவி பைரோஸ் பானு நன்றி கூறினார்.
விழாவில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.