திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊ.ஒ.ந.பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 84 மாணவர்களுக்கும் இறைவணக்க கூட்டத்திற்கு பிறகு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகங்கள், சீருடை இரண்டு செட் வழங்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பாக மாணவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வகுப்பறைக்கு உற்சாகமாக வரவேற்பு செய்யப்பட்டது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு TC வழங்கப்பட்டது. மேலும் முதல் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.