தாராபுரம் சின்னக்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு!

நந்து ஃபார்ம் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பண்ணையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் 6-வது வார்டு பகுதியில் நந்து ஃபார்ம் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான முட்டை கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தக் கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பல்வேறு தொந்தரவுகளை விவசாயிகள் சந்திப்பதாக கூறினர்.

இந்த நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க விவசாயிகள் ஒன்று திரண்டு சென்றனர். அவர்களை தாராபுரம் பகுதியிலேயே போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சின்னக்கம்பாளையம் ஆறாவது வார்டு பகுதியில் உள்ள 2- லட்சம் முட்டை கோழிகளை வளர்க்கும் நந்து கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோழிப்பண்ணையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

மேலும் அனைத்து அரசு துறை அதிகாரிகளிடமும் இது குறித்து புகார் மனு அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் வந்து பார்வையிட்டும் சென்றுள்ளனர். கோழிப்பண்ணையில் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈக்கள் தொல்லையால் ஈக்கள் உணவு பண்டங்களில் மொய்த்து சாப்பிட முடியாத சூழல் ஏற்படுகிறது. புதிய வகை ஈக்கள் பரவி மாடுகளை துன்புறுத்தி வருகிறது. என அதிகாரிகள் பார்த்துவிட்டு உண்மையை கூறிவிட்டு சென்றனர் ஆனால்.

நந்து கோழி பண்ணை மீது கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் வருவாய்த்துறை அதிகாரிகளோ. சுகாதாரத் துறை அதிகாரிகளோ எடுக்கவில்லை.

மேலும் இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் கால்நடைகளை நம்பி அப்பகுதி பொதுமக்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தற்போது பரவும் ஈக்கள் காரணமாக கால்நடைகளில் 10000,ற்கும் மேற்பட்ட ஈக்கள் மாடுகளில் அமர்ந்து அவற்றின் ரத்தத்தை குடித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு மாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈக்கள் அமர்வதால் மாட்டின் ரத்தத்தை முழுவதுமாக உறிஞ்சுவதால் அவை தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் கோழிப்பண்ணை நிர்வாகம் தான் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதே நிலை நீடித்தால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை விட்டு வெளியே செல்லக்கூடிய அவலநிலை ஏற்படும் என தெரிவித்திருந்தனர் சம்பவ இடத்திற்கு வந்த.வருவாய் வட்டாட்சியர் திரவியம் தலைமையில் கோழிப்பண்ணை முன்பு இன்று மதியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சின்னக்காம்பாளையம் விவசாயிகள் மற்றும் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் இதில் விவசாயிகள் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஈக்கள் தொல்லையால் ரூ.1, லட்சம் மதிப்பிலான 5 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

50-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு ராட்சத ஈக்கள் மாடுகளின் கண்களில் அமர்வதால் கண் பார்வை போய்விட்டதாகவும். மேலும் பண்ணை நிர்வாகத்தினர் செத்த கோழிகளை அப்புறப்படுத்தாமல் அங்கே தூக்கி விவசாய நிலங்களில் வீசுவதாலும் அதை நாய்கள் வந்து அழுகிய கோழிகளை சாப்பிடுவதால் மசை பிடித்து சின்னக்கம்பாளையம் பகுதியில் உள்ள விவசாயிகளின் ஆடு, மாடு மற்றும் கோழிகள் மற்றும் மனிதர்களை கடிப்பதாகவும் இதற்கு முழு காரணம் பண்ணை நிர்வாகத்தினரின் அலட்சியமே எனவும் தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகளுக்கும் கோழி பண்ணை நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் கோழிப்பண்ணையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *