நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் வரசிக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்.
திருவள்ளூர்
பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் நெடுவரம்பாக்கம் ஊராட்சி சென்னிவாக்கம் கிராம த்தில் உள்ள வரசிக்தி விநாயகர் திருக்கோயில் 3-வது முறையான மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரசையாக நடை பெற் றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது நெடுவரம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள சென்னி வாக்கம் கிராமத்தில் ஸ்தாபகர் கந்த சாமி பிள்ளை ஜமின் அவர் கள் முலம் நிறுவிய சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சக்தி வாய்ந்த அருள்மிகு வரசித்து விநா யகர் திருக்கோயில் உள்ளது.
இக் கோவிலில் மூன்றாவது முறை யாக மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதனையடுத்து கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்று நேற்று காலை 6:00 மணி முதல் 11 மணி வரை மஹா பூர்ணாஹீதி தீபாரா தனை, பிரதான கலசங்கள் ஆல யம் வலம் வருதல், கோபுர விமான கும்பாபி ஷேகம், உள்ளிட்ட பல் வேறு சிறப்பு பூஜைகள் வர சக்தி விநாயகருக்கு நடைபெற்ற தீர்த்த பிரசாதங்கள் வழங்குதல் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ் ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பி.வி.சங் கர் ராஜா குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை ஸ்ரீ வர சிக்தி விநாயகர் டெம்பிள் டிரஸ்ட் நிர்வாக தலைவர் என.பி.எஸ்.பாபுஜி, செயலாளர் பி.எஸ்.மணிகண்டன், பொருளா ளர் பி.ஹரிகிருஷ்ணன் உள்ளிட் டோர் செய்திருந்தனர்.