கோவையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டிகளுக்கான பயிற்சி
கேலோ இந்தியா போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி முகாமாக நடைபெற்ற இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு போட்டியில் , பாயில், சேபர், எப்பி’ ஆகிய மூன்று பிரிவின் கீழ்,மாநில, தேசிய,சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன..
ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள இந்த போட்டியை,தற்போது தமிழகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருவதோடு, தேசிய அளவில் சாதித்தும் வருகின்றனர்..
இந்நிலையில் கோவையில் கேலோ இந்தியா போட்டிகளுக்கு தயாராகும் விதமாக வாள் வீச்சு போட்டிகளுக்கான இலவச பயிற்சி முகாம் கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்றது சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கோவை மாவட்ட வாள் வீச்சு சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம் சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் முன்னிலையில் நடைபெற்றது..
இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…
இதில் ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கு தகுந்தபடி தாக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டனஇலகு ரக போட்டி,அடி வாள் சண்டை,குத்து வாள் போன்ற போட்டிகளில் எதிர் போட்டியாளர்களை தாக்கி எளிதில் புள்ளிகள் பெறுவது குறித்து வாள் வீச்சு பயிற்சியாளர்கள் போட்டியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்..
தொடர்ந்து பயிற்சிகளை நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இந்த முகாமில் கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் பொருளாளர் சிவமுருகன்,இணை செயலாளர் அரவிந்த்,தலைமை பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்…