மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்சிந்தனைவளவன் தலைமை தாங்கினார் மாநிலத் துணைச் செயலாளர் அழகுமலை, மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வரசு வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் முனியாண்டி(எ) இன்குலாப் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
,இதில் திருச்சியில் ஜூன் 14நடைபெற உள்ள மதச்சார்பின்மை மாநாட்டிற்கும், ஜூன் 18 முடக்கத்தான் பாண்டி நினைவு நாளை முன்னிட்டும், ஜூன் 30 மேலவளவு பேராளிகள் நினைவு நாளை முன்னிட்டும் நடைபெறும் கூட்டங்களுக்கு அதிக அளவில் நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கூட்டத்தில் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டங்களுக்கு சோழவந்தான் தொகுதியில் இருந்து அதிகப்படியான வாகனங்களில் நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் யாரை வேட்பாளராக அறிவிக்கின்றாரோ அவருக்கு அதிகப்படியான வாக்குகள் பெற்று தந்து வெற்றி பெறச் செய்வோம் என கூறினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், தமிழாளன், ராதா,முன்னாள் துணைச் செயலாளர் ராமச்சந்திரன்,உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மகளிரணி தன்மான செல்வி நன்றி கூறினார்.