திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
திருவாரூரில் கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
18 சித்தர்களில் ஒருவரான கமலமுனி சித்தருக்கு அவதார தின குருபூஜை வழிபாடு நிகழ்வு இன்று நடைபெற்றது திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் 18 சித்தர்களில் ஒருவரான கமல முனி சித்தர் வாழ்ந்து முத்தி அடைந்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் கமல முனி சித்தரின் அவதார தின குருபூஜை இங்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று கமல முனி சித்தருக்கு அவதார தின குருபூஜை வழிபாடு நடைபெற்றது..
அதனை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்று புனித நீர் மற்றும் பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடரச்சியாக ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் சித்தர்களின் சிறந்த சிந்தனைகள் என்ற சொற்பொழிவு நடைபெற்றது. பிறகு கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.