நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல் திட்டம் 2025 – 2026 க்கான முதற்கட்டம் பயிற்சி நான்கு நாள் 26.05.2025.முதல் 27.05.25 வரை பாப்பா கோயில் கிராம இ சேவை மையத்தில் நடைப்பெற்றது.

பின்பு 2 நாட்கள் 29.05.2025 முதல் 30.05.2025 வரை அந்தனப்பேட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் வட்டார இயக்க மேலாளர் பொறுப்பு தெய்வமணி தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கமணி வரவேற்று பேசினார்.

மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் பயிற்சிகள் ஸ்ரீரங்கபாணி குத்து விளக்கு ஏற்றி பயிற்சி அளித்தார் இதில் சுயஉதவிக் குழு, எஸ்.கெட்ச். ஜீ ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பி. எல். எப் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு பீ. எல்.எப் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது. கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு , ஜூஹாரி விண்டோ மாற்றத்திற்கான கூட்டமைப்பு கோட்பாடு,BLF, PLF மறுசீரமைப்பு தேர்வு செய்யும் முறை நேரடியாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பரிமாணங்கள் கொண்டு 2025 – 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் இலக்கு மற்றும் பொறுப்புகள் கொண்டு இந்த ஆண்டு செயல் திட்டம் பயிற்சி பணியாளர்களுக்கு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் , சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் சமுதாய வள பயிற்றுநர்கள் கணக்காளர்களுக்கு பயிற்சி நான்கு நாட்கள் வழங்கப்பட்டது. முடிவில் அந்தனப் பேட்டை ஊராட்சி சமுதாய வள பயிற்றுநர் கீதா,சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர் லூர்து மேரி பயிற்சி ஏற்பாடு செய்தனர்.

நாகை மாவட்ட நிருபர் ஜி.சக்கரவர்த்தி

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *