அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தேவசேரி மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து 80 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் பேசியது அரசு விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு உள்ளது அதில் ஒரு திட்டம் தான் உழவரைத் தேடி திட்டம் இந்த திட்டம் முதலில் நமது தேவசேரி கிராமத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது
இதில் அனைத்து விவசாய மக்களும் பயனடையும் வகையில் இருக்கும் விவசாய நிலம் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் இந்த திட்டம் உதவும் வகையில் தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டு உள்ளது நிலம் இல்லாதவர்களுக்கு ஆடு, கோழி, என திட்டங்கள் செயல்படுத்தப்படும். தொடர்ந்து விவசாயிகளுக்கு அரசு தரும் சலுகைகளை கிடைக்கவில்லை என்றால் மனுவாக எழுதி என்னிடமோ அரசு அதிகாரியிடமோ கொடுக்குமாறு தெரிவித்தார்.
மதுரை தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பிரபா வரவேற்று பேசினார், மதுரை வேளாண் உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) செந்தில்குமார், வேளாண் உதவி பொறியாளர் சாருமதி, மற்றும் திமுக பொது குழு உறுப்பினர் முத்தையன் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி, கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ரத்தினம், ஊராட்சி செயலர் அழகுமீனா, வேளாண் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சோபனா, ஜோஷ்பின், நிர்மலா, உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் விற்பனை துறை ராஜ்குமார், அலங்காநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரன், வட்டார அலுவலர் வசந்தகுமார், துணை அலுவலர் பாலாமணி, உதவி அலுவலர்கள் ஈஸ்வரன், பால்பாண்டி, இந்திரஜித், பயிர் அறுவடை பணியாளர்கள் கௌசல்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி, செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் சுந்தர்ராஜன், திமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..