பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) அரியலூர் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி அவர்கள் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம், பாமக நிறுவனரும், வழிகாட்டியுமான மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், மாநிலத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணையின்படியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று முதல் அவர் தனது பொறுப்பை அலுவல்பூர்வமாக ஏற்கிறார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட செயலாளராக தனது பொறுப்பை ஏற்றுக்கொண்ட காடுவெட்டி ரவி, மறைந்த வன்னியர் சங்க நிரந்தரத் தலைவர் மாவீரர் காடுவெட்டி குரு அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாவீரர் குரு அவர்களின் ஆசியோடும், வாக்காளர்களின் பேராதரவோடும், பெரும் வாக்கு வித்தியாசத்தில் பாமக வெற்றிபெறும் என அவர் உறுதிமொழி வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் காடுவெட்டி சின்னப்பிள்ளை, குருவாளப்பர் கோவில் ராமதாஸ், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன், நகர தலைவர் அழகுதுரை, வீரமுத்து உள்ளிட்ட பாமக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்