ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த 5நாட்கள் வரை நெமிலி தாலுகாவில் நடந்தது ஜமாபந்தியில் 271 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவுக்கு வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜேஷ்,நெமிலி வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அருணாகுமாரி, சண்முகம், வட்ட வழங்கல் அலுவலர் வினோத், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சமரபுரி, மண்டல துணை வட்டாட்சியர் காந்தி, தேர்தல் துணை வட்டாட்சியர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்.
நெமிலி வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார் நிகழ்ச்சியில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC,பெருமாள் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள் குறித்துபொதுமக்களிடமும் விவசாயிகளிடம் பேசினார்.
அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் பங்கேற்று 271 பயனாளிகளுக்கு ரூ. 47 லட்சத்து 20 ஆயிரத்து 564 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மத்திய திமுகஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், நெமிலி நகர திமுக நிர்வாகி ராகேஷ் ஜெயின், விவசாயிகள் சங்க தலைவர் சுபாஷ் நாயுடு,வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடேசன். மகேஷ்,நெமிலி விஏஓ சங்கத் தலைவர் பூபாலன் மற்றும் விஏஓகள் மணிகண்டன். கருத்திருமன், சதீஷ். கோபிநாத், முருகவேல், லட்சுமணன், பாண்டியன் மற்றும் கிராம உதவியாளர்கள், வேளாண்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.