நாகை மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையம் மற்றும் அ/மி ஸ்ரீ சிங்காரவேலவர் சன்னதியிலும் கடந்த உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமாறன் தலைமையில் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிக்கல் அருள்மிகு ஸ்ரீ.சிங்கார வேலவர் திருக்கோவில் வளாகத்தில் நாகை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிக்கல் அ.ஞானப்பிரகாசம் முன்னிலையிலும், நாகை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் வெ.அருண்பிரசாந்த் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகாந்த் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி பொருளாளர் ஆகாஷ்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிக்கல் இள.நடாரஜன் மற்றும் சிவா,ஹரிஷ் ஆகியோர் கலந்துகொண்டு இரு இடங்களிலும் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.