ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா.

தாராபுரம் ,

தாராபுரம் பெரிய கடை வீதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் இவரது அண்ணன்கள் மன வளர்ச்சி குன்றிய சக்தி மற்றும் ராஜாராம் இவர்களின் பூர்வீக சொத்து கொட்டாபுளி பாளையம் பகுதியில் உள்ளது இவரது பூமியை திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் வாகரை பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தாராபுரத்தில் ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருந்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்

இவரும் இவரது பங்குதாரர் பண்ணாரி அம்மன் மோட்டார்ஸ் சுகுமார் இருவரும் சேர்ந்து ரவிச்சந்திரன் பூர்விகா சொத்தை விலைக்கு வாங்கிய வகையில் ரூபாய் 40 லட்சம் பணத்தை தர வேண்டியதை கேட்டும் மற்றும் அவர் கிரைய உடன்படிக்கை செய்து கொடுத்த 63 சென்ட் இடத்தை ஒப்பந்தத்தை ரத்து செய்த கோரியும் ஏற்கனவே நான்கு வருடங்களாக கேட்டும் பணத்தை தராமல் காலதாமத படுத்தி வருவதால் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்து வந்த நிலையில் இன்று காலை தாராபுரம் புதிய ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஸ்டாலின் வீட்டு முன்பு ரவிச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *