சுரண்டை
தென்காசி மாவட்டம் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
விழாவிற்கு பொதுநல மன்ற நிர்வாகி ஆறுமுகம் தலைமை வகித்தார் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், முன்னிலை வகித்தார் வெள்ளகால் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காமராஜ் வரவேற்றார் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் ஒய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரி தாளாளர் ராஜகுமார் சிறப்பரையாற்றினார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் ஞானதுரை, தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கிருபா சம்பத், தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்க மாநில பொறுப்பாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் மூலம் பாராட்டு விழா நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஹெலன் கிருபா ஏற்புரை நிகழ்த்தினார் மேலப் பட்டமுடையார்புரம் டிடிடிஏ பள்ளி தலைமையாசிரியர் டேவிட்சன் நன்றி கூறினார்