பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் – திருச்சி சாலையில் புதியதாக கட்டப்பட்ட அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி நேற்று சிறப்பாகத் திறக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் திறப்பு விழா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர், பள்ளி வளாகத்தை பார்வையிட்டார் அமைச்சர், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளி, ஜெயங்கொண்டம் பகுதிக்கே ஒரு முக்கியமான கல்வி மையமாக அமையும் எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், பள்ளி கல்வி குழுமத்தின் தாளாளர் சிலம்பு செல்வன், நிர்வாகிகள் மனோஜ் குமார், சங்கரநாராயணன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பள்ளியின் உள்நோக்கங்கள், கல்வித் தரம், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு திட்டமிட்டுள்ள வளாகங்கள் மற்றும் வசதிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பள்ளியின் ஆரம்பநிலையிலேயே பல்வேறு கல்வி நுட்பங்கள், பரந்த தள வசதிகள் மற்றும் மாணவர் நலத்துக்கான திட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கல்வி பெருமை பெறும் புதிய கட்டடமாக அக்ஷரா வித்யா மந்திர் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.