திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆலவந்தி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த 20- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு முதல் காப்பு கட்டப்பட்டது. அன்றிலிருந்து நான்கு நாட்கள் ஸ்ரீ ஆலவந்தி அம்மன் வீதியுலா காட்சி வானவேடிக்கையுடன் நடைபெற்று

நேற்று 27- ந்தேதி செவ்வாய்க்கிழமை அலங்காரத்தில் ஸ்ரீ ஆலவந்தி அம்மன் வீதியுலா சப்பரத்தில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கையுடன் தேர் திருவிழா வீதியுலா காட்சி நடைபெற்றது. வீடுகள் தோறும் பொது மக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று 28- ஆம் தேதி புதன்கிழமை மாலை காப்பு நீக்குதல் மற்றும் மஞ்சள் நீர் விளையாட்டுடன் அம்மன் வீதியுலா காட்சியும் நடைப்பெறுகிறது.

தேர் திருவிழா ஏற்பாடுகளை பாடகச்சேரி கிராமவாசிகள், மண்ணின் மைந்தர்கள் மற்றும் நேதாஜி பாசறை யினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *