தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தின் தாலுகா செயலாளர் ஆர்.லட்சுமணன் மகன் எல். வினேஷ் – சோனியா காந்தி திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அதிமுக மாவட்ட அவை தலைவர் எஸ் கே சண்முகசுந்தரம் தென்காசி ஒன்றிய செயலாளர் எஸ் சங்கர பாண்டியன் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் சேர்ம பாண்டி அதிமுக கிளைச் செயலாளர்கள் பாட்டப்பத்து என். எம். ராமர், ஆயிரப்பேரி உ.சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன்
பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது.
எனவே தமிழக முதலமைச்சர் சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திப்பதை போல டெல்லிக்கு சென்று நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்து வந்துள்ளார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி அருகே உள்ள சிறந்த சுற்றுலாத்தலமான பழைய குற்றாலம் அருவி பல்லாண்டு காலமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் சீசன் காலங்களில் வருகை தந்து இரவும் பகலும் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தற்போது தேவையில்லாமல் வனத்துறையினர் புகுந்து பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், பெரும் இடையூறுகள் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்றும் அதனை வனத்துறை வசம் ஒப்படைக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகும் வனத்துறையினர் பழைய குற்றாலம் அருவியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்படுவது, அங்கு வரும் பொது மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறுகள் செய்வது கண்டிக்கத்தக்கது. இதனை மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்க கூடாது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு வனத்துறையினரை பழைய குற்றாலம் அருவிப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சிபிஐ தாலுகா செயலாளர் எம் எஸ் கிட்டப்பா, தென்காசி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இசக்கித்துரை, சிபிஐ கட்சியின் நிர்வாகிகள் எஸ். வேலாயுதம், டி.சுப்பையா, எஸ்.மாரியப்பன், ஏ.பரமசிவன், பி.வேலு, பி.சிங்காரவேலு,
ஆர்.சமுத்திரக்கனி,ஜே.அந்தோணி ராஜ்,பி.பாலசுப்பிரமணியன்,வி.ராஜேந்திரன், எம். சுடலைமுத்து,எஸ்.முருகையா,என்.ஐயப்பன்,சுடலையாண்டி,பி.ரமேஷ்,எம்.மாரியப்பன்,எஸ்.முருகையா,எஸ்.ஜெயராமன்,எம்.சுப்பையா ஜி.சுரேஷ் குமார், கண்ணன்,
வி.செல்லப்பாண்டியன்,தென்காசி மாவட்ட ஏ.ஐ.ஒய்.எப். மாவட்ட செயலாளர் எல்.வேல்மாவட்டம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.