கோவை மாவட்டம், வால்பாறை – அய்யர்பாடி பிரிவு வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை கருமுட்டி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த சிவமுத்து (வயது 52) மற்றும் தங்கம்மாள் (வயது 52) ஆகியோர் இன்று காலை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய கரடி ஒன்று எதிர்பாராத வகையில் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது
இந்த எதிர்பாராத தாக்குதலில் சிவமுத்துவுக்கு தலை மற்றும் வலது கையிலும், தங்கம்மாளுக்கு முகம் மற்றும் கையிலும் காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்களை மீட்ட பொதுமக்கள் உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது இருவரும் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் வனத்துறை சார்பாக வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரடி தாக்கி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000/-, மொத்தம் ரூ.20,000/- உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது