மதுரையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமைச் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தின் மாநிலத் தலைவர் அன்னம யில் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் நாகலட்சுமி, பொருளாளர் பாலமுருகன், மாநில துணைத் தலைவர் குருநா தன், துணைப் பொதுச் செயலர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கிராம ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களை
பணி நியமனம் செய்ய வேண்டும். ஊதியம் வழங் குவதில் உள்ள பாகுபாடு, காலதா மதம் ஆகியவற்றைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல மாதத்தின் இறுதி அல்லது முதல் தேதியில் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில்
தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவக் காப்பீடு, பாதுகாப்பு உடை, பணி தொடர்பான கருவி களை முறையாக வழங்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களை அவமரியாதையாகப் பேசும் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறை, அரசு விடு முறைகளை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.


சட்ட ஆலோசகர் சகாய பிலோமின்ராஜ், தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு அமைப்பின் அமைப்பாளர் சோ.பூமி, ஆதித் தமிழர் கட்சி மாநில ஆலோசகர் விடுதலை குமார், தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகி சிதம்பரம், தமிழ்த் தேசிய மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியமேரி,திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலர் நீதிவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட் டங்களிலிருந்து திரளானோர் பங்கேற்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *