மதுரையில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில், மதுரை தல்லாகுளம் பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
50 சதவீத உதவியாளர் பணியி டங்களை தேர்வாணையம் மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், 450-க்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்,பொதுப் பணித் துறை, நீர் வளத் துறை ஊழியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
கோட்டக் கணக்கர் பதவியை மாநில சேவையாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலர் க.நீதிராஜா ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டச் செயலர் நஜிமுதீன், மதுரை மாவட்டப் பொருளாளர்
அசோக்ராஜா, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச் சந்திரன், மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சந்திரபோஸ், மாவட்டத் தலைவர் இரா.தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை ஆட்சிப் பணியா ளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.செல்வம் சிறப்பு அழைப்பா ளராகப் பங்கேற்று நிறைவுரை யாற்றினார். மாவட்டச் செயலர் ராஜா நன்றி கூறினார்.