சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் தீவு மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட நாட்டு படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர், தொடர்ந்து 2020- 2021 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கொடியம்பாளையம் கிராமத்தில் நபார்டு திட்டத்தில் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதல் அமைக்க பட்ஜெட் ஒதுக்கீடு செய்து தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மீன்பிடி இறங்கு தளம், படகு அணையும் சுவர், மீன் ஏலமிடும் கூடம், வலை பின்னும் கூடம் உள்ளிட்டவை திறந்து வைத்தார். இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டு திறந்து வைத்தார்.

மேலும் படகு செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இரண்டு மீட்டர் ஆழம், 30 மீட்டர் அகலம், 700 மீட்டர் நீளம் தூர்வாரி செய்து தர கோரிக்கை மனு சட்டமன்ற உறுப்பினர் மீனவர்கள் அளித்தனர். இதில் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ்,கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன்,மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மீன்வளத்துறை ஆய்வாளர் துரைராஜ் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் நாட்டார்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *