திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த 5- ந்தேதி திங்கட்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

கடந்த 16- ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 10- மணிக்கு அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. 17- ந்தேதி சனிக்கிழமை இரவு 10- மணிக்கு சக்கரவாணி கோட்டை பிடிப்பது நிகழ்ச்சி நடைபெற்றது.

18- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9- மணிக்கு திருவலஞ்சுழி பட்டாபிராமன் & சக்ரவர்த்தி குழுவினரின் அரவான் களப்பலி நாடகம் நடைபெற்றது. கடந்த 19- ந்தேதி திங்கட்கிழமை நடைபெற வேண்டிய தீமிதி திருவிழா அன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 26- ந்தேதி திங்கட்கிழமை காலை 9- மணிக்கு சக்தி கரகம் எடுத்தல்,தீ போடுதல்,11- மணிக்கு காவடி எடுத்தல், மதியம் 12- மணிக்கு கூந்தல் முடி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6- மணிக்கு மாருதி சிலம்பாலயம் யுனிவர்சிட்டி ஸ்போர்ட்ஸ் அக்காடமி சிலம்பகலை மூத்த ஆசான் கே.ராஜா மணிகண்டன், துணை ஆசான் ஜி.ரம்யா இணைந்து வழங்கும் சிலம்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7- மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது.

இரவு 9- மணிக்கு ஆலயத்தின் எதிர் புறம் உள்ள நால்வர் நாடக கலையரங்கத்தில் வலங்கை.ரெயின்போ சேகர் வழங்கும் பாரத் மெலோடிஸ் ஆர்க்கெஸ்ட்ரா -வின் திரைப்பட தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று 28- ந்தேதி புதன்கிழமை மாலை காப்பு நீக்குதல், மஞ்சள் நீராட்டு விழாவும், சுவாமி வீதியுலா காட்சியும் நடைப்பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க. மும்மூர்த்தி மற்றும் சின்னகரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *