திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த 5- ந்தேதி திங்கட்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
கடந்த 16- ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 10- மணிக்கு அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. 17- ந்தேதி சனிக்கிழமை இரவு 10- மணிக்கு சக்கரவாணி கோட்டை பிடிப்பது நிகழ்ச்சி நடைபெற்றது.
18- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9- மணிக்கு திருவலஞ்சுழி பட்டாபிராமன் & சக்ரவர்த்தி குழுவினரின் அரவான் களப்பலி நாடகம் நடைபெற்றது. கடந்த 19- ந்தேதி திங்கட்கிழமை நடைபெற வேண்டிய தீமிதி திருவிழா அன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 26- ந்தேதி திங்கட்கிழமை காலை 9- மணிக்கு சக்தி கரகம் எடுத்தல்,தீ போடுதல்,11- மணிக்கு காவடி எடுத்தல், மதியம் 12- மணிக்கு கூந்தல் முடி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6- மணிக்கு மாருதி சிலம்பாலயம் யுனிவர்சிட்டி ஸ்போர்ட்ஸ் அக்காடமி சிலம்பகலை மூத்த ஆசான் கே.ராஜா மணிகண்டன், துணை ஆசான் ஜி.ரம்யா இணைந்து வழங்கும் சிலம்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7- மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இரவு 9- மணிக்கு ஆலயத்தின் எதிர் புறம் உள்ள நால்வர் நாடக கலையரங்கத்தில் வலங்கை.ரெயின்போ சேகர் வழங்கும் பாரத் மெலோடிஸ் ஆர்க்கெஸ்ட்ரா -வின் திரைப்பட தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று 28- ந்தேதி புதன்கிழமை மாலை காப்பு நீக்குதல், மஞ்சள் நீராட்டு விழாவும், சுவாமி வீதியுலா காட்சியும் நடைப்பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க. மும்மூர்த்தி மற்றும் சின்னகரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.