பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா…திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தெற்கு செங்குந்தர் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக சத்திரம் காவிரி படித்துறையில் இருந்து பால்குடம், காவடி ,அலகு காவடி திரளான பக்தர்கள் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவில் அருகே உள்ள திடலை வந்தடைந்தனர் அதனைத் தொடர்ந்து தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் பின்னர் அம்மன் வீதி உலா வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது அங்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது .

விழாவில் கபிஸ்தலம் கோவில் கமிட்டி தலைவர் நாட்டாமைகள் மற்றும் தெற்கு முதலியார் தெரு கிராமவாசிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *