பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வயலில் அறுந்த கிடந்த மின் கம்பியில் காட்டுப்பன்றி அடிபட்டு உயிரிழப்பு……

பருத்தி வாழை வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுப்பன்றிகள் வனத்துறையினர் பிடித்து செல்ல விவசாயிகள் கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி பார்வதிபுரம் கிராமத்தில் சமீபத்தில் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது இதனால் விவசாயி சங்கர் என்பவருடைய நிலத்தில் மின்மோட்டருக்கு செல்லக்கூடிய மின் கம்பிகள் அறுந்து வயலில் விழுந்தது.


இரவு நேரத்தில் வயலில் பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி அறுந்து கிடந்த மின் கம்பியில் மின்சாரம் தாக்கி அடிபட்டு காட்டுப்பன்றி உயிரிழந்தது.
உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்த மின்சாரத் துறையினர் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை பண்டாரவாடை உதவிமின்பொறியாளர் ரஞ்சித்குமார், ஆக்கமுகவர் நீலமேகம், மின் பணியாளர்கள் விஜயபாலன், மாரியப்பன் ஆகியோர் விரைந்து வந்து அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்து அப்பகுதியில் மின் வினியோகம் வழங்கப்பட்டது.

மேலும் பாபநாசம் , ராஜகிரி பண்டாரவாடை ,பார்வதிபுரம், கோவில்தேவராயன்பேட்டை, லெட்சுமிபுரம், வன்னியடி இளங்காரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் வாழை பருத்தி எள் ஆகியவை சாகுபடி செய்துள்ளனர் இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராகிம் கூறியதாவது …

சாகுபடி வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை மிதித்தும் அதன் மீது புரண்டும் சேதம் ஏற்படுத்துகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர் மேலும் வனத்துறையினர் மூலம் காட்டுப்பன்றிகளைப் பிடித்து செல்ல மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களை வேளாண்மைத் துறை தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு தொகை வழங்கவும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *