பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், வன்னியர் சங்கத்தின் நிரந்தரத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு, சமூக எழுச்சி, கல்வி மற்றும் மக்கள் உரிமைப் போராட்டங்களில் தனித்து விளங்கினார். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நாள் நிகழ்வில், காடுவெட்டி குருவின் திருவுருவ சிலைக்கு மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் தலைவர் குரு கனலரசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வன்னியர் சமூகத் தலைவர், அமைப்புகளின் பிரதிநிதிகள், குருவின் நெருங்கிய ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குருவின் சமூக சேவை வழிமுறையைப் பின்பற்றி, அவரது நினைவு நாளில் ரத்ததான முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இது சமூகத்தில் சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு செயலாக அமைந்தது.

நிகழ்வில் பேசின மாவீரன் மஞ்சள் படையின் தலைவர் குரு கனலரசன், “மக்கள் உரிமைக்காக வாழ்ந்த குரு எங்கள் வழிகாட்டி. அவரது பிறந்த நிலத்திலேயே நினைவுநாள் அனுசரிப்பது பெருமைக்குரியதாகும். குருவின் நினைவுகள் எங்களது சமூகச் சேவைகளுக்கு தொடர்ந்து தூண்டுதலாக இருக்கும்,” என தெரிவித்தனர்.

இந்த நினைவு அஞ்சலி விழா முழுவதும் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்ததோடு, காடுவெட்டி குருவின் வாழ்க்கை நெறிகளை நினைவு கூறும் நிகழ்வாக இது அமைந்தது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *