கோவை ஆல்வியல் ஃபன் சேவி வளாகத்தில் பானசோனிக் நிறுவனம் சார்பாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவங்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசு மற்றும் கரியமிலிக் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்கும் விதமாக நாட்டில் மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி அதிகரித்து வருகிறது..

பேட்டரி மின்சார மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,இவற்றை சார்ஜிங் செய்யத்தேவையான சார்ஜிங் மையங்களை அதிகரிப்பது தற்போது மிகத் தேவையாக உள்ளது இந்நிலையில் கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ஆல்வியல் ஃபன் சேவி வணிக வளாகத்தில் பானசோனிக் நிறுவனம் சார்பாக எலக்ட்ரிக் இரு சக்கர மற்றும் கார்களுக்கான சார்ஜிங் மையம் துவங்கப்பட்டது..

இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.பி.குளோபல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மற்றும் இயக்குனர்கள் சர்மிளா மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சார்ஜிங் மையத்தை திறந்து வைத்தனர்..

வணிக வளாகத்தின் பார்க்கிங் பகுதியில் துவங்கப்பட்ட இதில் இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் தளங்களை பிரபல ஏத்தர் நிறுவனமும்,கார்களுக்கான சார்ஜிங் தளத்தை பனாசோனிக் நிறுவனமும் அமைத்துள்ளன சார்ஜிங் மையங்கள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும்,எனவே பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த வணிக வளாகத்தி்ல் சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்..

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *