இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கள்ளிக்குளம், நெறிஞ்சிபட்டி ஆகிய 2 கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த 2 கிராமத்திற்கும் சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதிக்கு இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்தது

இவர்கள் சாயல்குடி அல்லது முதுகுளத்தூர் செல்ல வேண்டுமெனில் பேரையூர் அல்லது கோவிலாங்குளம் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லும் நிலையே இருந்து வந்தது.
இந்நிலையில் தங்கள் ஊருக்கு முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி செல்ல பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சருமான. .R.S.ராஜகண்ணப்பன் இடம் தங்கள் ஊரின் வழியாக சென்று வர பேருந்து ஏற்பாடு வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.


அதன்படி அமைச்சர் கோரிக்கையை பரிசீலிலனை செய்து முதுகுளத்தூரில் இருந்து சாயல்குடி மற்றும் சாயல்குடியில் இருந்து முதுகுளத்தூருக்கு காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் செல்லும் புதிய வழித்தட பேருந்து (முதுகுளத்தூரில் இருந்து பேரையூர், கள்ளிக்குளம், நெறிஞ்சிப்பட்டி, கோவிலாங்குளம், பிள்ளையார்குளம், சாயல்குடி) விடியல் பயணம் தொடங்கப்பட்டது.

இதனை ஒட்டி கள்ளிக்குளம் நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் புதிய வழித்தடத்தில் வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார். பின்னர் அந்த பேருந்தில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் .R.S.ராஜ கண்ணப்பணுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கமுதி மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *