திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அரையூரில் மூங்கில் கொள்ளைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பொன்னுசாமி தலைமை வகித்தார்.
கட்சியின் மூத்தவர் ஜி. சாமி அய்யா மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி.ரவி, தேவிகா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். கிளைச் செயலாளர் சண்முகம் வேலை அறிக்கைகளையும், வரவு- செலவுகளை படித்தார். ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் புதிய பொறுப்புகளை அறிவித்தார்.
புதிய செயலாளராக சண்முகம், துணை செயலாளராக பழனி, பொருளாளராக முருகானந்தம் மற்றும் ஒன்றிய மாநாட்டிற்கான பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். கூட்டத்தில் 1. மூங்கில் கொள்ளைத் தெரு, கரும்பத் தெரு மயான சாலை அமைத்து, பெரிய வாய்க்காலில் பாலம் கட்டி தர வேண்டும். 2. அன்பிற்குடையான், கரும்பத் தெரு மெயின் ரோட்டில் உள்ள பழைய மின் கம்பங்களை( இத்து கீழே விழும் நிலையில் உள்ளது) அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும்.3. தஞ்சாவூரில் இருந்து வரும் தடம் எண் 48 பேரூந்தை மாலை 7.30 மணிக்கும் செல்ல அனுமதிக்க வேண்டும். 4. அன்பிற்குடையான் தெரு வாசிகள் வழியாக வடிகால் தென்பாதி தெரு வழியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி வெட்டி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் புதிய கிளை செயலாளர் சண்முகம் அனைவருக்கும் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.