எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
விவசாய நிலங்களில் மின்மோட்டார்கள் திருட்டு அதிகரிப்பு. பழைய இரும்பு கடைக்காரர்கள் தான் காரணம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நடவும் விவசாயி வலியுறுத்தல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய விவசாயி கோவி. நடராஜன் திருவெண்காடு பகுதியில் விவசாய நிலங்களில் மின்மோட்டார்கள் திருட்டு அதிகரித்துள்ளது
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழைய இரும்பு கடைக்காரர்களை காவல்துறை அழைத்து திருட்டு மின்மோட்டார்கள் வாங்க கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று குற்றஞ்சட்டி பேசினார்.
தொடர்ந்து விவசாயி ராஜேஷ் பேசும்போது, 6000 ஏக்கர் பாசன வசதி பெரும் கழுமலையாறு பாசன வாய்க்காலில் நகர் பகுதியில் கழிவு நீர் கலப்பதால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதை தடுக்க வேண்டும் எனவும் பனங்காட்டங்குடி சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டுள்ளது
அதற்கு மாற்றாக மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உப்பு நீர் விவசாய நிலங்களில் உட்புகுவரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி ஒருவர் வலியுறுத்தினார்.